தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?
தேவர்களில் தொடங்கி அனைத்துப் பொருள்களையும் படைப்பதற்காகப் பூவிலே நான்முகப் பிரம்மனைப் படைத்தான் எம்பெருமான், அந்தத் தேவனைத் தவிர மற்றவர்களுக்குப் பூப்போட்டுப் பூசை செய்வது தகுமா? (தகாது.)