ஆயர்கொழுந்தாய், அவரால் புடைஉண்ணும்
மாயப்பிரானை, என் மாணிக்கச்சோதியை,
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப்பிறவி மயர்வுஅறுத்தேனே.
எம்பெருமான் ஆயர்குலத்தில் பிறந்தவன், வெண்ணெய் திருடி அவர்களிடம் அடிபட்டவன், மாயப்பிரான், என் மாணிக்கச்சோதி, தூய அமுது... அத்தகைய எம்பெருமானைப் பருகிப்பருகி மகிழ்ந்தேன், மாயப்பிறவியால் வந்த என்னுடைய அறிவின்மையைப் போக்கிக்கொண்டேன்.