குடைந்து வண்டுஉண்ணும் துழாய்முடியானை
அடைந்த தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஒடுவிக்கும்மே.
வண்டுகள் மொய்த்துத் தேனை உண்ணுகிற திருத்துளசிமாலையை அணிந்தவன் எம்பெருமான், அவனைப் பற்றுக்கோடாக அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செறிந்த சொற்களால் தொடுத்தார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், நோய்கள் உடைந்து ஓடிப்போகும்.