'வஞ்சனே!' என்னும், கைதொழும், தன
நெஞ்சம் வேவ நெடிதுஉயிர்க்கும், விறல்
கஞ்சனை வஞ்சனைசெய்தீர், உம்மைத்
தஞ்சம்என்று இவள் பட்டனவே.
வலிமைமிக்க கம்சனை வென்றவரே,
உம்மையெண்ணி இவள் நெஞ்சம் வேகிறது, 'எனக்கு வஞ்சனை செய்தவனே' என்று கூவுகிறாள், கும்பிடுகிறாள், பெருமூச்சுவிடுகிறாள்,
உங்களைத் தஞ்சமாக அடைந்து இவள்பட்ட சிரமங்கள் போதாதா? அருள்செய்யுங்கள்!