பட்டபோது, எழுபோது அறியாள், விரை
மட்டுஅலர் தண்துழாய்என்னும், சுடர்,
வட்டவாய், நுதி நேமியீர், நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே.
ஒளிவீசுகிற, வட்டமான வாய், நுனியைக்கொண்ட சக்ராயுதத்தை ஏந்தியவரே,
இந்தப்பெண் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறாள், சூரியன் எப்போது எழுகிறது, எப்போது மறைகிறது என்பதைக்கூட இவள் அறிவதில்லை, நாள்கள் ஓட ஓட, உங்கள் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறாள், மணம்வீசுகிற, தேன்நிறைந்த, குளிர்ச்சியான உங்கள் துளசி மாலையையே எப்போதும் எண்ணுகிறாள், இந்த அறியாப்பெண்ணுக்கு நீங்கள் எவ்வாறு அருள்செய்ய எண்ணியுள்ளீர்கள்?