ஏழை, பேதை, இராப்பகல் தன
கேழ்இல் ஒண்கண்ண நீர்கொண்டாள், கிளர்
வாழ்வை வேவ இலங்கைசெற்றீர், இவள்
மாழைநோக்கு ஒன்றும் வாட்டேன்மினே.
இந்த அறியாப்பெண், பேதைப்பெண், இரவுபகலாக வருந்துகிறாள், இவளுடைய ஒப்பற்ற, ஒளிவீசும் கண்களில் நீர் வடிகிறது,
அரக்கர்களின் வளமான வாழ்வும் செல்வமும் அழியும்படி இலங்கையை வென்றவரே, இவளுடைய இளமையான பார்வையை வாட்டாதீர்கள்.