பாடல் - 11
தெய்வநாயகன், நாரணன், திரிவிக்கிரமன் அடி
இணைமிசைக்
கொய்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவர மங்கை மேய
பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆரா அமுதே.
தெய்வநாயகன், நாரணன், திரிவிக்கிரமனாகிய எம்பெருமானின் திருவடிகளிலே, கொய்யப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செய்தார், அவற்றுள், குளிர்ச்சியான ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தைப்பற்றி எழுதப்பட்ட இந்தப் பத்து பாடல்களையும் எப்போதும் பாட வல்லவர்கள் வானோருக்குத் தெவிட்டாத அமுதமாகத் திகழ்வார்கள்.