ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

சிந்தனையோடு வணங்கும்
ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

பாடல் - 11

நாக அணைமிசை நம்பிரான் சரணே சரண்
                                                 நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும்
                                                ஒர்பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே.

ஆதிசேஷனாகிய பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்டிருக்கும் நம்பிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாள்தோறும் ஒரே சிந்தனையோடு வணங்கும் குருகூர்ச் சடகோபன் மாறன், அப்பெருமானைப்பற்றி ஆயிரம் திருப்பாடல்களை அந்தாதியாகப் பாடியுள்ளார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் விண்ணுக்கும் மேலான வைகுந்தத்தைச் சென்றடைந்து நித்தம் மகிழ்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com