ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

ஆழமான கடலால்
ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

பாடல் - 11

அறிவு அரிய பிரானை, ஆழிஅம் கையனையே அலற்றி
நறிய நல்மலர் நாடி நல்குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறிகொள் ஆயிரத்துள் இவைபத்தும் திருக்குறுங்குடி
                                                                                                     அதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.

மணம் மிகுந்த, நல்ல மலர்களைத் தேடுகிறவரான, நல்ல திருக்குருகூர்ச் சடகோபன், யாராலும் எளிதில் அறியப்பட இயலாத பெருமானை, சக்ராயுதத்தை ஏந்திய அழகிய கைகளைக்கொண்டவனை அழைத்துச் சொன்ன பாடல்கள் ஆயிரம், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் திருக்குறுங்குடிப் பெருமானின் அடையாளங்களை விவரிக்கிறவை, இவற்றை அறிந்து கற்க வல்லவர்கள், ஆழமான கடலால் சூழப்பட்ட இந்த உலகிலே வைஷ்ணவர்களாகத் திகழ்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com