ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 10

என்ன குறை?
ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 10


பாடல் - 10

இல்லை அல்லல், எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்,
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே.

துன்பங்கள் இனி இல்லை, எனக்கு இனி என்ன குறை? (ஏதுமில்லை.) தாமரை மலரிலே அமர்ந்த திருமகள் அமரும் திருமார்பைக்கொண்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், கற்களால் கட்டப்பட்ட மதிள் சுவரால் சூழப்பட்ட திருக்கண்ணபுரம். அந்த ஊரின் பெயரைச் சொன்னால், துயரங்கள் என்றைக்கும் நம் பக்கத்தில் நெருங்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com