பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7

டலிலே திருப்பள்ளிகொள்கிற
பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7

பாடல் 7

மடந்தையர் வாழ்த்தலும், மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர், தொடுகடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே.

பெண்கள் வாழ்த்தியவுடன், தோண்டப்பட்ட கடலிலே திருப்பள்ளிகொள்கிற எங்கள் கேசவன், கிளர்ந்தெழும் ஒளியைக்கொண்ட மணிமுடியை அணிந்த குடந்தையின் கோவலனுடைய குடியாகிய அடியவர்களுக்கு மருதரும் வசுக்களும் தோத்திரம் சொன்னார்கள், அவர்கள் எங்கே சென்றபோதும் பின்தொடர்ந்து வந்து வாழ்த்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com