பாடல் 10
வினை, வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு
நினைமின் நெடியானே.
நீர்ச்சுனைகளில் மலர்ந்த நல்ல பூக்களை எம்பெருமானுக்கு இடுங்கள், அந்த நெடியவனை நினையுங்கள், உங்களுடைய வினைகளும், வலிமையான இருளும் (அறியாமையும்) பயந்து ஓடிப்போய்விடும்.