பாடல் 11
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து
அடியார்க்கு அருள் பேறே.
நெடியவனாகிய எம்பெருமானின் அருளைச் சூடிய சடகோபன், அப்பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களை வழங்கினார். அவற்றில் இந்தப் பத்து பாடல்களும் அடியவர்களுக்கு அருள்புரிகிற பேறுகள்.