இலக்கியச் சங்கமம்

இலக்கியவீதி நடத்தும் "கலைகளால் செழிக்கும் செம்மொழி' தொடர் நிகழ்ச்சி. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு:

இலக்கியவீதி நடத்தும் "கலைகளால் செழிக்கும் செம்மொழி' தொடர் நிகழ்ச்சி. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: மரபின்மைந்தன் முத்தையா, தெ.ஞானசுந்தரம், இலக்கியவீதி இனியவன் ; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4 ; 10.10.17 மாலை 6.30.

சாகித்திய அகாதெமியும் ஈரோடு சிக்கய்யா நாயக்கர் கல்லூரியும் இணைந்து நடத்தும் "தனித்தமிழ் இயக்கமும் தனித்தமிழ் இலக்கியமும்' - உரையரங்கம். தலைமை: இரா.சம்பத் ; பங்கேற்பு: கு.திருமாறன், கு.உதயகுமார், பா.கமலக்கண்ணன், கு.கணேசன், ந.மு.தமிழ்மணி, பி.தமிழ்ப்பாவை, ச.சரஸ்வதி, இரா.வேணுகோபால் சாமி, ப.திருநாவுக்கரசு, கரு.நல்.பன்னீர்செல்வம் ; சிக்கய்யா நாயக்கர் கல்லூரி, ஈரோடு ; 11.10.17 காலை 10.00.

எம்.ஏ.சி.அறக்கொடை நிறுவனர் டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் 99 ஆவது பிறந்தநாள் விழா, விருதுகள் வழங்கும் விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: ஏ.சி.முத்தையா, வே.சிவசுப்பிரமணியன், ஆ.மணிவேலு, ஏ.டி.பத்மசிங் ஐசக், பி.வேதகிரி ; இராஜா அண்ணாமலை மன்றம், சென்னை; 12.10.17 மாலை 5.30.

இராமாயணம் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: அரு.சோமசுந்தரன் ; ஸ்ரீ வீரகண்ட விநாயகர் திருக்கோயில், கீழ ஊருணி, காரைக்குடி ; 13.10.17 முதல் 15.10.17 வரை மாலை 6.00.

திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: கோ.பெரியண்ணன் ; பங்கேற்பு: செ.தட்சணாமூர்த்தி, துரை.ஜெயராமன், தேவேந்திரன் ; குருவள்ளுவம் வளாகம், 17, அம்மன் கோவில் தெரு, வாணுவம்பேட்டை, சென்னை-91; 14.10.17 மாலை 5.30.
வ் உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள் ; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 15.10.17 மாலை 5.00.

ஞாலம் இலக்கிய இயக்கம் நடத்தும் பெரிய புராண தொடர் சொற்பொழிவு. தலைமை: செந் தமிழ்ச் சித்தன்; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன் ; நேரு அரசினர் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிச்சாலை, நங்கைநல்லூர், சென்னை; 15.10.17 மாலை 5.00.

இலக்கியச்சோலை எட்டாம் ஆண்டு விழா. தலைமை: கருமலைத்தமிழாழன் ; பங்கேற்பு: எஸ்பி.முத்துராமன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், அமுதா பாலகிருஷ்ணன், கார்முகிலோன், சீனி.ரவிபாரதி; இக்சா மையம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8 ; 15.10.17 மாலை 5.00.

ஸ்ரீஅறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: பால சீனிவாசன்; ஸ்ரீ அறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை, திரு.வி.க.சாலை, வெட்டுவாணம், வேலூர்  மாவட்டம்; 15.10.17 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com