jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்

By DIN  |   Published on : 30th October 2017 01:03 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

n4

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும் - நீதிநாயகம் து.அரிபரந்தாமன்; பக். 88; ரூ.75; நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, மதுரை ; )0452 - 2580636.
"அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்' - இந்நூலின் முதல் கட்டுரை. இது தவிர இன்னும் ஏழு கட்டுரைகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி.யில் நூலாசிரியர் ஆற்றிய உரை, அவர் நீதிபதியாகப் பதவியேற்றபோது ஆற்றிய உரை, பணிநிறைவு பெற்ற போது ஆற்றிய உரை, "பொதுபள்ளிக்கான மாநில மேடை' அமைப்பு நீட் பற்றி வெளியிட்ட துண்டறிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யக் கோரி நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து நூலாசிரியரின் முகநூல் பதிவு என இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. 
"மதச்சார்பின்மையின் மையமான விதி என்பது அரசையும் மதத்தையும் பிரித்து வைப்பதே ஆகும். அரசின் நிர்வாக விஷயங்களில் மதத்துக்கு எவ்விதமான இடமும் இருப்பதில்லை' என்று மதச்சார்பின்மையை வரையறுக்கும் நூலாசிரியர், இந்தியாவில் மதச்சார்பின்மைக் கோட்பாடு எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பதை விளக்குகிறார். 
அரசியல் அமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உறுதி செய்வதை எடுத்துக்காட்டும் நூலாசிரியர், பல்வேறு வழக்குகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், நீதிமன்றம் மதச்சார்பின்மையை உறுதிப்படுத்திய நிகழ்வுகளையும், அதில் பின்னடைவு ஏற்பட்ட நிகழ்வுகளையும் விவரித்திருக்கிறார். 
கேரளத்தில் உள்ள அமைதிப் பள்ளதாக்கு காட்டுப் பகுதியில் நீர் மின்நிலையம் அமைப்பதால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் அங்குள்ள மக்கள் போராடி, அந்தப் பகுதியைக் காப்பாற்றியதைப் போல தமிழ்நாட்டிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் வேண்டும் என்கிறார். 
ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்காவிட்டால், ஒரு காலத்தில் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்று ஒரு கட்டுரை எச்சரிக்கிறது. 
நூலாசிரியரின் எளிமை, உயர்ந்த பண்புகளை அவர் நீதிபதி பதவியேற்றபோதும், பணி நிறைவு பெற்றபோதும் ஆற்றிய உரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பிடத்தக்க நூல்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்