மகா புத்தாய்வு - கோரா பாபு; பக்.304; ரூ.300; நியூ கேலக்ஸி பப்ளிகேஷன், புதுச்சேரி; )0413- 2241555.
இன்றைய காலகட்டத்தில் எந்த அளவுக்கு பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கிறதோ, அவற்றை மேலும் வளர்த்தெடுத்து, மனித இனம் அடைய வேண்டிய இலக்குகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி, இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்ந்த அறிவுக் குவியல், கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகளின் சிந்தனை வளர்ச்சி என மிகவும் விரிவாக அவற்றைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.
நாம் தற்போது மனித இன அழிவினை ஏற்படுத்தக் கூடிய போர் தளவாடங்களையும், அணு ஆயுதங்களையும் உற்பத்தி செய்து, உலகப் பொருளாதாரத்தை நாச வழியில் கொண்டு செல்கிறோம். போர்களை ஒழிக்கும் அமைதி மார்க்கம் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வலியுறுத்திய மகான்களின் அறிவுரைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். உலகில் நடைமுறையிலுள்ள அரசுகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுபவை. நல்லரசை அமைப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது என்று கூறும் நூல்.