பாடல் 11:
உரத்தினால் அரக்கன் உயர் மாமலை
நெருக்கினானை நெரித்தவன் பாடலும்
இரக்கமா அருள் செய்த பாலைத்துறை
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே
விளக்கம்:
உரம்=வலிமை: நெருக்கினான்=அச்சமுறச் செய்தவன்:
பொழிப்புரை:
தனது வலிமையினால் கயிலை மலையை அசைத்து, உமையம்மை அச்சம் கொள்ளுமாறு செய்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் அடர்த்து அவனது தலைகளையும் தோள்களையும் நெரித்தவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் சாமகானம் இசைத்து பெருமானை வணங்க, அரக்கன் பால் இரக்கம் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். பாலைத்துறையில் உறையும், அவரைத் தமது கரங்களால் தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.