பாடல் 7:
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்
மணிமுடி மேல் அரவு வைத்தார்அ ணிகொள் மேனி
நீறு மலிந்து எரியாடல் நிலவ வைத்தார் நெற்றி மேல்
கண் வைத்தார் நிலையம்வை த்தார்
ஆறு மலைந்து அறுதிரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால்
அடி அமரர் பரவ வைத்தார்
நாறு மலர்த் திருவடி என் தலை மேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார்ந ல்லவாறே
விளக்கம்:
மாறு=மாறுபாடு கொண்ட, பகை உணர்வு கொண்ட; மலைந்தார்=போர் செய்தவர்; நிலையம்=திருக்கோயில்கள். நாறு மலர்=மணம் வீசும் மலர்கள்
பொழிப்புரை:
சிவநெறியிலிருந்து மாறுபாடு கொண்டு, பகை உணர்வுடன் அனைவருடன் போர் செய்த, திருபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை சிவபெருமான் எரிய வைத்தார்; தனது அழகிய சடைமுடி மேல் பாம்பினை வைத்துள்ளார்; அவர் தனது அழகிய திருமேனியில் நீற்றினைப் பூசி, கையினில் தீயினை ஏந்தி நடனம் ஆடுபவர்; தனது நெற்றியில் கண்ணை உடையவர்; பல திருக்கோயில்களை உடையவர்; கரைகளில் மோதி கரையை உடைக்கும் வல்லமை கொண்ட அலைகளை உடைய கங்கை ஆற்றினை, தனது சடையில் அடக்கி வைத்தவர்; தேவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தனது திருவடிகளை வழிபட வைத்தார்; நறுமணம் வீசும் மலர்களைக் கொண்ட தனது திருவடியினை எனது தலையின் மீது வைத்த நல்லூர்ப் பெருமானார் மிகவும் நல்லவர்.