பாடல் 6:
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர் போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே
விளக்கம்:
அங்கண்=அழகிய கண்கள்
பொழிப்புரை:
கோங்கு செருந்தி கொன்றை ஆகிய மலர்களுடன் கங்கை நதியையும் தனது சடையில் சூடிக் கொண்டுள்ள பெருமான் காழி நகரத்தில் உறைகின்றார். அவர் அழகிய கண்களை உடைய பாம்புகளைத் தனது உடலின் பல்வேறு இடங்களில் அணிகலனாக பூண்டுள்ளார். கோபத்தினால் சிவந்த கண்களை உடையவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்,