94. பூவார் கொன்றை - பாடல் 10

வேதங்களில் நிறைந்துள்ள
94. பூவார் கொன்றை - பாடல் 10


பாடல் 10:

    பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
    கரக்கும் உரையை விட்டார் காழியார்
    இருக்கின் மலிந்த இறைவர் அவர் போலாம்
    அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே 

விளக்கம்:

பெருக்க=மிகவும் அதிகமாக; பிதற்றும்=சாரமற்ற சொற்களைப் பேசும்; கரக்கும்=உண்மையை மறைத்து பேசும்; அருப்பின் முலையாள்=அரும்பு போன்று மேன்மை வாய்ந்த மார்பகங்கள்;' இருக்கின் மலிந்த=இருக்கு முதலான நான்கு வேதங்களில் நிறைந்துள்ள;

பொழிப்புரை:

மிகவும் அதிகமாக சாரமற்ற சொற்களைப் பேசும் சமணர்களும், உண்மையை மறைத்துப் பேசும் புத்தரின் சொற்களையும், சீர்காழியில் வீற்றிருக்கும் பெருமான் ஒரு பொருட்டாக  கருதாமல் நீக்குகின்றார்; இருக்கு முதலாகிய நான்கு வேதங்களில் நிறைந்துள்ள பெருமான், அரும்பு போன்று மென்மையான மார்பகங்களை கொண்டுள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com