jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்

85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 5

By என். வெங்கடேஸ்வரன்  |   Published on : 14th January 2018 12:00 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தேவாரம்


பாடல் 5


    நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
           நற்றவனே நின் பாதம் போற்றி போற்றி
    வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி
          வெண்மதியம் கண்ணி விகிர்தா போற்றி
    துஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றி
          தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
    செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
         திருமூலட்டானனே போற்றி போற்றி


விளக்கம்:

வெஞ்சுடரோன்=சூரியன்:

தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்கள் உடைக்கப்பட்டதாகவும், கண்கள் பிடுங்கப் பட்டதாகவும், பல திருமுறைப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.  திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தில் சூரியன் தண்டனை அடைந்ததைக் குறிக்கும் பாடல்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. கண் பறிக்கப்பட்ட சூரியனின் பெயர் பகன் என்று வெளிப்படையாக கூறிய மணிவாசகர், பற்கள் உடைக்கப்பட்ட சூரியனின் பெயரினை குறிப்பிடவில்லை. இந்த சூரியனின் பெயர் பூடன் என்று உரையாசிரியர்கள் கூறுவார்கள்.

    உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே கண்ணைப் பறித்தவாறு உந்தீ பற
    கருக்கெட நாமெலாம் உந்தீ பற
    சூரியனார் தொண்டை வாயினில் பற்களை வாரி நெரித்தவாறு உந்தீ பற
    மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற   

ஆமயம் தீர்த்து அடியேனை என்று தொடங்கும் பதிகத்தில் (பதிக எண்: 6.96) அப்பர் பிரான் பகனின் கண்ணைப் பறித்த வீரபத்திரர், சூரியர்களில் ஒருவனது பல்லை இறுத்தார் என்று குறிப்பிடுகின்றார். எச்சன்=வேள்வியை முன்னின்று நடத்திய வேள்வித் தலைவன்; மெச்சன் என்று தன்னைத் தானே மிகவும் பெரியவனாக நினைத்து மெச்சிக் கொண்டு, சிவபெருமானை அவமதித்து வேள்வி நடத்திய தக்கன். வியாத்திரன் என்பது யாத்ரிகன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. இங்கே மாறான வழியில் சென்ற தக்கன் என்று பொருள் கொள்ளவேண்டும்.. 

    எச்சன் நிணைத் தலைக் கொண்டார் பகன் கண்
           கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார் 
    மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாகக் கொண்டார்
           விறல் அங்கி கரம்             கொண்டார் வேள்வி காத்த
    உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார்
           உணர்விலாத் தக்கன் தன்             வேள்வி எல்லாம்
    அச்சம் எழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
           அடியேனை ஆட்கொண்ட             அமலர் தாமே 


மேற்கண்ட பாடலில் இரவிகள் என்று பன்மையில் குறிப்பிட்ட காரணத்தால், ஒருவருக்கு மேற்பட்ட சூரியன் என்பது புலானகின்றது வேதங்களில் த்வாதச ஆதித்யர்கள் என்று பன்னிரண்டு சூரியர்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திற்கும் அதிபதியாகிய சூரியன் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றான். பன்னிரண்டு வடமொழிப் பெயர்களாவன, தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா.  

பொழிப்புரை:

நஞ்சு ஒடுக்கப்பட்ட கழுத்தினை உடையானே, தவத்தில் ஆழ்ந்து யோக வடிவாக விளங்குபவனே, தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களை உடைத்தவனே, வெண் பிறையை, தலையில் மாலையாகச் சூடியவனே, ஊழிமுடிவில் உலகெங்கும் அடர்ந்த இருள் சூழ்ந்து இருக்கும் சமயத்தில் விருப்பமுடன் ஆடல் புரிபவனே, தூய திருநீற்றினை உடலில் பூசியவனே, சிவந்த சடையை உடையவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்