சிங்கப்பூரில் மின்சார கார் பகிர்வு திட்டம் துவங்குகிறது

சிங்கப்பூரில்  ப்ளூகார் (Bluecar) என்னும் நிறுவனம் முதன் முதலில் மின்சார கார் பகிர்வு திட்டத்தைத் துவங்குகிறது. 
சிங்கப்பூரில் மின்சார கார் பகிர்வு திட்டம் துவங்குகிறது

சிங்கப்பூரில்  ப்ளூகார் (Bluecar) என்னும் நிறுவனம் முதன் முதலில் மின்சார கார் பகிர்வு திட்டத்தைத் துவங்குகிறது. 

டிசம்பர் 12 முதல் முதற்கட்டமாக 80 மின்சார கார்களுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதிலும் 30 நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் 120 மின்விசை சேர்வி மையங்கள் அமைக்கப்படுகின்றது.

இந்த  சேவையினை பயனர்கள் மின்விசை சேர்வி நிலையத்தில் இருந்து ப்ளூகார் (Bluecar) ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.  சேவை முடிந்த பின்பு அருகில் உள்ள மின்விசை சேர்வி நிலையத்தில் விட்டு விட வேண்டும். இந்த சேவைக்கான கட்டணங்கள் நிமிடக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். குறைந்தது 15 நிமிடங்கள் உபயோகிக்க வேண்டும். கட்டணமாக 30 நிமிடங்களுக்கு $15 (Rs. 700) வசூலிக்கப்படும்

இதன் நிர்வாக இயக்குனர் பிராங்க் விட்லே (Franck Vittle) கூறுகையில், “சிங்கப்பூரில் தொடங்கவிருக்கும் இந்த சேவை குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு வரவிருப்பதால் நாங்கள் உற்சாகமாக உள்ளோம். பாரிஸுக்கு அடுத்தபடியாக இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய மின்சார வாகன கார் பகிர்வு திட்டமாகும். சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு இந்த சேவையின் பலன்களையும் வசதிகளையும் கொடுக்க நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.”
 
கூகுல் பிலே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இல்  இந்த சேவைக்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

மேலும் விபரங்களுக்கு : https://www.bluesg.com.sg/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
செய்தி : கார்த்திகேயன் நடராஜன், சிங்கப்பூர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com