சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் சாய் பிரணீத் சாம்பியன்​

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் மோதிய கிடம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் இருவரும் இந்தியர்கள் ஆவர். இறுதி போட்டியில் சக வீரர் ஸ்ரீகாந்தை 17-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வென்றார்.

இப்போட்டி 54 நிமிடங்கள் நடைபெற்றது. இது சாய் பிரணீத் வெல்லும் முதலாவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சாய் பிரணீத், "நாம் தினசரி ஆடும் ஒருவருடன் இறுதிப் போட்டியில் ஆடி வெற்றி பெறுவது அத்தனை எளிதான காரியமல்ல. இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள இந்திய ரசிகர்கள் எனக்கு மிகவும் உற்சாகமளித்தனர் என்று கூறினார்.

நேற்றைய இறுதிப் போட்டியில் மோதிய 2 இந்திய வீரர்களும் கோபிசந்தின் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com