இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 5-ஆவது மற்றும் கடைசி போட்டி சபைனா பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியன் கேப்டன் ஜேஸன் ஹோல்டர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2-ல் வெற்றியும், மேற்கிந்தியத் தீவுகள் ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றன. ஒரு போட்டி மழையால் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றும் எனத் தெரிகிறது. இருப்பினும், இதில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்குகிறது.
இதன்காரணமாக கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:
இந்தியா: அஜிங்கிய ரஹானே, ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
மேற்கிந்தியத் தீவுகள்: இவின் லீவிஸ், கைலி ஹோப், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ், ஜேஸன் முகமது, ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ரோவ்மேன் பவல், தேவேந்திர பிஷூ, அல்சாரி ஜோசப், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.