இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவருமான சௌரவ் கங்குலி தனது 45-வது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாடினார்.
இதையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன.
இந்நிலையில், பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர், ட்விட்டரில் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர் கூறியாதவது:
அன்பிற்குரிய கங்குலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் என்றும் ஆனந்தமாக இருந்திட வேண்டும். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போதும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார்.
அதற்கு, டியர் அனுராக், தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் நிச்சயம் தேவை என கங்குலி பதில் ட்வீட் செய்தார்.