உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் (காம்பவுன்ட்) அணி தங்கம் வென்றது.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் உலகக் கோப்பை வில்வித்தை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக செல்பட்ட இந்திய அணி காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் அமெரிக்காவையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய அணி கொலம்பியாவை சந்தித்தது.
இதிலும் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி 226-221 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம், இத்தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.