லக்னோவில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இந்தியா 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடி ஆடி அவுட் ஆகாமல் 61 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். ராகுல் 14 பந்துகளில் 26 ரன்களும்,
இதைத்தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களத்தில் விளையாடி வருகிறது.