18-வது ஆசியப் போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை தொடங்கின.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரியும் அபிஷேக் வர்மாவும் தங்கம், வெண்கலம் என முறையே இரு பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள்.
இறுதிச்சுற்றில் இவ்விரு இந்திய வீரர்களும் ஜப்பானின் மட்சுடாவும் மோதினார்கள். அனுபவம் வாய்ந்த ஜப்பான் வீரருக்குக் கடும் சவால் அளித்த இளம் வீரர் செளரப், கடைசிக்கட்டத்தில் அதிகப் புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்.
இதையடுத்து செளரப் செளத்ரிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.