ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்.
இன்று நடைபெற்ற அரையிறுதியில் சீன தைபேவின் தாய் ஜூ யிங்கைச் சந்தித்தார் சாய்னா. உலகின் நெ.1 வீராங்கனையான தாய் அட்டகாசமாக விளையாடி 21-17, 21-14 என நேர் செட்களில் சாய்னாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சாய்னா இந்தப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு 36 வருடங்கள் கழித்து தனிநபர் பதக்கம் கிடைத்துள்ளது.