ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து வரலாறு படைத்துள்ளார். உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும், இரண்டாம் நிலை வீராங்கனை ஜப்பானின் அகேன் யமாகுச்சியும் மோதினர். அனல் பறந்த இதில் முதல் ஆட்டத்தை சிந்து 21-17 என வென்றார். ஆனால் இரண்டாம் ஆட்டத்தில் யமகுச்சி சிறப்பாக ஆடி 15-21 என வென்றார். வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாம் ஆட்டத்தில் 21-10 என்ற கணக்கில் சிந்து அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆசியப் போட்டி பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றில் முதன்முறையாக நுழைந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் சீன தைபேவைச் சேர்ந்த தாய் ஹு யிங்கை எதிர்கொள்கிறார்.
இந்தப் போட்டியை இணையம் வழியாக நேரலையில் காண: