ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல், மனிகா பத்ரா ஆகிய இருவரும் தோல்வியடைந்துள்ளார்கள்.
இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் வாங் மன்யுவை எதிர்கொண்டார் மனிகா பத்ரா. 4-1 என்கிற செட் கணக்கில் மனிகா பத்ராவை வீழ்த்தினார் சீன வீராங்கனை.
மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேவைச் சேர்ந்த சுவாங் சிஹ்யுவானை எதிர்கொண்டார் ஷரத் கமல். 4-2 என்கிற செட் கணக்கில் ஷரத் கமலை வீழ்த்தினார் சீன தைபே வீரர்.