ஆசியப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணியை ஹாங்காங் அணி வீழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா, தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய மகளிர் அணி, இறுதிச்சுற்றில் ஹாங்காங் அணியிடம் 2-0 எனத் தோல்வியடைந்தது. சுனன்யாவும் ஜோஸ்னாவும் தோல்வியைச் சந்தித்தார்கள். இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சுனைனா குருவில்லா ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.