சிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?: விராட் கோலி பதில்

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.20 கோடிக்கு அம்பட்டி ராயுடுவைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் அணி...
சிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?: விராட் கோலி பதில்

ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடி வரும் சிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு, இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா என்கிற கேள்விக்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சென்னை அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 24-வது ஆட்டம் பெங்களூருவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.  டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் தாகுர், தாஹிர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை அணி சார்பில் கேப்டன் தோனி-அம்பதி ராயுடு இணை பெங்களூரு அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர். ராயுடு 8 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை சிராஜ் வீசினார். அதில் தோனி ஒரு சிக்ஸரை விளாசினார். 3 வைடு பந்துகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 14 ரன்களை பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ, தோனி ஆகியோர் அதிரடியாக சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியாக 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களுடன் சென்னை வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் சஹால்2 விக்கெட்டுகளையும், பவன் நேகி, உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.20 கோடிக்கு அம்பட்டி ராயுடுவைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வரும் ராயுடு, தற்போது 283 ரன்கள் எடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ராயுடுவை இந்திய அணிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்தக் கேள்வி விராட் கோலியிடமும் நேற்று கேட்கப்பட்டது. அதற்கு கோலி அளித்த பதில்:

ராயுடு இளம் வீரர் அல்லர். அவர் 15 வருடங்களாக முக்கியமான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். திறமையான வீரர். இந்தியாவுக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ஒருவராலும் கூறமுடியாது. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். 

32 வயது ராயுடு, இந்தியாவுக்காக 34 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். 2013-ம் வருடம் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ராயுடு, 2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.

அம்பட்டி ராயுடு, இந்தியாவுக்காக விளையாடிய கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில் எடுத்த ரன்கள்:

44, 124*, 41, 62*, 41* (ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு எதிராக எடுத்தவை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com