இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 2-ஆவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 113 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றது. எனவே 3-ஆவது போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி இப்போட்டியில் இரு புதிய சாதனைகளைப் படைத்தார். அவற்றின் விவரம் பின்வருமாறு:
10 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-ஆவது இந்தியர்:
அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்:
10 ஆயிரம் ரன்கள் கடந்தவர்களின் சிறந்த சராசரி:
குறைந்த இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள்:
இவற்றில் இதர வீரர்கள் அனைவரும் முதல் வரிசை வீரர்களாகவே இருந்தவர்கள். அதிலும் குறிப்பாக முதல் 3 இடங்களில் களமிறங்கியவர்கள். ஆனால் தோனி, பெரும்பாலும் 5 அல்லது 6-ஆவது இடங்களிலேயே களமிறங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் புதிய சாதனைப் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். மேலும் சர்வதேச அளவில் 4-ஆவது வீரராக உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள்: