டாடா ஓபன் இண்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிநிலை வீராங்கனையான ஷ்ரேயான்ஷி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ஷ்ரேயான்ஷி 12-11, 11-6, 11-7 ன்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சிங்கப்பூரின் ஹுய் ஜென் கிரேஸýக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
18 வயதான ஷ்ரேயான்ஷி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் மலேசியாவின் சோனியாவை சந்திக்கிறார்.