தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தரம்சாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், உத்தரப் பிரதேச அணி ஆமை வேகத்தில் விளையாடிவருகிறது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி, 90 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பேட்டிங்குக்குச் சாதகமில்லாத ஆடுகளம் என்பதாலும் தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சாலும் ரன்கள் குவிப்பது சிரமமாக உள்ளது. ஸ்ரீவஸ்தவா 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சமர்த் சிங், 115, உமங் சர்மா 36 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.