இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்குகிறது.
புணே, ராஞ்சி, தர்மசாலா ஆகிய மைதானங்களில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த 3 மைதானங்களுக்கும் கடந்த நவம்பரில்தான் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.
முதல் போட்டி பிப்ரவரி 23 முதல் 27 வரை புணேவிலும், 2-ஆவது போட்டி மார்ச் 4 முதல் 8 வரை பெங்களூரிலும், 3-ஆவது போட்டி மார்ச் 16 முதல் 20 வரை ராஞ்சியிலும், 4-ஆவது போட்டி மார்ச் 25முதல் 29 வரை தர்மசாலாவிலும் நடைபெறவுள்ளன.
சுழற்சி முறை அடிப்படையில் புணே, ராஞ்சி, தர்மசாலா ஆகிய மைதானங்களுக்கு டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2013-இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா 0-4 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.