உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆமதாபாதில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 73-20 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில் ஈரான் அணி 28-22 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்தது.
சனிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஈரானும் பலப்பரீட்சை நடத்துகின்றன.