டென்மார்க் ஓபன் 2-ஆவது சுற்றில் சிந்து அதிர்ச்சித் தோல்வி

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
டென்மார்க் ஓபன் 2-ஆவது சுற்றில் சிந்து அதிர்ச்சித் தோல்வி

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 2-ஆவது சுற்றில் சிந்து 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயாக்கா சாட்டோவிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் ஒரு மணி, 5 நிமிடங்கள் நடைபெற்றது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே 2-ஆவது சுற்றோடு வெளியேறியது சிந்துவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-23, 15-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ஷி யூகியிடமும், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 10-21,20-22 என்ற நேர் செட்களில் மலேசியாவின் லீ சாங் வெய்யிடமும் தோல்வி கண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com