சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா-தென் கொரியா ஆட்டம் டிரா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா-தென் கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா-தென் கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
மலேசியாவின் குவான்டன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் கொரியாவின் பல கோல் வாய்ப்புகளை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முறியடித்தார்.
எனினும் 11-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர்களின் தவறை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட தென் கொரிய வீரர் ஜியோங் ஜுன் ஊ கோலடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இதன்பிறகு சரிவிலிருந்து மீள போராடிய இந்திய அணி 33-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை லலித் உபாத்யாய் அடித்தார். இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆடடத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com