ரஞ்சி கிரிக்கெட்: காந்தி, ஜெகதீசன் சதம்; தமிழகம்-547/7

மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 174 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 547 ரன்கள் குவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 174 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 547 ரன்கள் குவித்துள்ளது.
ஒடிஸா மாநிலம் கட்டக்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணியில் தினேஷ் கார்த்திக் 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 85 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்திருந்தது. கெளஷிக் காந்தி 71, இந்திரஜித் 44 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய தமிழக அணியில் இந்திரஜித் 68 ரன்களில் ஆட்டமிழக்க, கெளஷிக் காந்தியுடன் இணைந்தார் ஜெகதீசன். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. கெளஷிக் காந்தி 368 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 157 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, ரங்கராஜன் களம்புகுந்தார்.
இதன்பிறகு மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் சதமடித்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் சதமடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெகதீசன். தமிழக அணி 504 ரன்கள் எடுத்திருந்தபோது ரங்கராஜன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அஸ்வின் கிறிஸ்து களம்புகுந்தார்.
2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 174 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 547 ரன்கள் குவித்துள்ளது. காந்தி 118, அஸ்வின் 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் தரப்பில் அஸ்வின் தாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com