செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான் ஜோடி தோல்வியடைந்தது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பயஸ்-பெஜிமான் ஜோடி 6-4, 3-6, 10-12 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் டொமினிக் இங்லாட்-ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் ஜோடியிடம் தோல்வி கண்டது.
2015-இல் நியூஸிலாந்தில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பயஸ், அதன்பிறகு இதுவரை எந்தவொரு ஏடிபி போட்டியிலும் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.