அக்டோபர் இறுதிக்குள் களம் திரும்புவேன்: சாய்னா

அக்டோபர் மாத இறுதிக்குள் களம் திரும்புவேன் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்தார்.
அக்டோபர் இறுதிக்குள் களம் திரும்புவேன்: சாய்னா

அக்டோபர் மாத இறுதிக்குள் களம் திரும்புவேன் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்தார்.
முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வரும் சாய்னா, இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
அக்டோபர் மாத இறுதிக்குள் பாட்மிண்டனில் களமிறங்கிவிடுவேன். அதுவரை நடைபெறவுள்ள எந்தப் போட்டியிலும் விளையாட முடியாது. தற்போதைய நிலையில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கிறேன். அதில் பின்னடைவை சந்திக்க நேரிடலாம்.
ஏற்கெனவே 6 வாரங்கள் ஓய்வில் இருந்துவிட்டேன். முழு அளவில் பயிற்சியைத் தொடங்குவதற்கு இன்னும் 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். நான் முழு உடற்தகுதியைப் பெறும்பட்சத்தில் நவம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும். தற்போது நலமாக இருக்கிறேன். காயத்திலிருந்து மீள்வதற்கான அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாய்னா, ரியோ ஒலிம்பிக்கில் காயம் காரணமாக குரூப் சுற்றோடு வெளியேறினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவருடைய வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com