ஐஎஸ்எல் தொடக்க விழா: ஆலியா பட், ஜாக்குலின் பங்கேற்கிறார்கள்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் தொடக்க விழா வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது.
ஐஎஸ்எல் தொடக்க விழா: ஆலியா பட், ஜாக்குலின் பங்கேற்கிறார்கள்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் தொடக்க விழா வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது.
அதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண் தவன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பிரமாண்டமாக நடைபெறும் தொடக்க விழாவில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 30 நிமிடங்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஜான் ஆப்ரஹாம் கூறுகையில், "இந்த முறை தொடக்க விழாவை நடத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம். இது எங்கள் அணிக்கும், வட கிழக்கு மாநில மக்களுக்கும் மிகப்பெரிய விஷயம் ஆகும். இந்தத் தொடக்க விழா வட கிழக்கு மாநில மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழில்முறை வீரர்கள் உருவெடுப்பார்கள்' என்றார்.
இந்த விழாவில் கேரள அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், ஐஎஸ்எல் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான நீதா அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com