ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி 60.01 மீ. தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வரும் 56-ஆவது தேசிய தடகளப் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் தனது 3-ஆவது வாய்ப்பில் 60.01 மீ. தூரம் எறிந்தார். இதன்மூலம் 60 மீ. தூரத்தை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக கடந்த ஜூலையில் ஹைதராபாதில் நடைபெற்ற மாநிலங்கள் இடையிலான போட்டியில் அன்னு ராணி 59.87 மீ. தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது.