சிங்கப்பூர் ஓபன்: இறுதிச்சுற்றில் மோதும் இந்திய வீரர்கள்!

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் மோதவுள்ளார்கள்.
சிங்கப்பூர் ஓபன்: இறுதிச்சுற்றில் மோதும் இந்திய வீரர்கள்!

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் மோதவுள்ளார்கள். 

இந்திய வீரரான சாய் பிரணீத், இன்று நடைபெற்ற தனது அரையிறுதியில், 21-6, 21-8 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் லீ டாங் கியூனைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  

மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் தனது அரையிறுதியில் 21-13, 21-14 என்கிற நேர் செட்களில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். எனவே நாளை நடைபெறும் சிங்கப்பூர் ஓபன் இறுதிச்சுற்றில் இரு இந்திய வீரர்களும் மோதவுள்ளார்கள்.

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முதல்முதலாக நுழைந்த இந்தியர்கள் என்கிற பெருமையை இருவரும் பெற்றுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com