இன்றைய போட்டியில் புணே ஐபிஎல் அணியில் இடம்பிடித்த 17 வயது தமிழக வீரர்!

ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளம் வீரர் என்கிற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார்.
இன்றைய போட்டியில் புணே ஐபிஎல் அணியில் இடம்பிடித்த 17 வயது தமிழக வீரர்!

17 வயது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஹைதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் புணே அணி சார்பாக விளையாடுகிறார்.

புணேவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

புணே அணியில் இடம்பெற்றதன் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளம் வீரர் என்கிற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார். காயத்தால் அஸ்வின் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளார். 2016-ல் நடைபெற்ற U-19 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக சுந்தர் விளையாடினார்.

ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புணே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஹைதராபாத் ஒரு வெற்றியும், புணே ஒரு வெற்றியும் பெற்றுள்ளன.

ஐபிஎல்-லில் விளையாடிய இளம் வீரர்கள்:

17 வயது 177 நாள்கள்: சர்ஃபராஸ் கான் 
17 வயது 179 நாள்கள்: சங்வான் 
17 வயது 199 நாள்கள்: வாஷ்ங்டன் சுந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com