வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் தோல்வி கண்டார்.
தொழில்முறை ஸ்குவாஷ் வீரர்கள் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் வேலவன் 8-11, 3-11, 8-11 என்ற நேர் செட்களில் எகிப்தின் முகமது எல்ஷெர்பினியிடம் தோல்வி கண்டார்.
கடந்த வாரம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பார்க் வியூ ஓபன் போட்டியின் இறுதிச் சுற்றிலும் இதே எல்ஷெர்பினியிடம்தான் வேலவன் தோற்றார்.