பார்சிலோனா ஓபன்: நிஷிகோரி விலகல்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பார்சிலோனா ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான நிஷிகோரி, வெளியிட்டுள்ள அறிக்கையில், "பார்சிலோனா ஓபனில் இருந்து விலகுவதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்குப் பிடித்த போட்டி. இங்கு எனக்கு மறக்க முடியாத இனிமையான நினைவுகள் இருக்கின்றன. ஆனால் எனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை. அதனால் பார்சிலோனா ஓபனில் விளையாட முடியவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
பார்சிலோனா ஓபன் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com