எந்த இலக்கையும் எட்டிப் பிடிப்போம்

எதிரணி நிர்ணயிக்கும் எந்த இலக்கையும் எட்டிப் பிடிக்கும் நம்பிக்கையுடன இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன கெளதம் கம்பீர் கூறினார்.
எந்த இலக்கையும் எட்டிப் பிடிப்போம்

எதிரணி நிர்ணயிக்கும் எந்த இலக்கையும் எட்டிப் பிடிக்கும் நம்பிக்கையுடன இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன கெளதம் கம்பீர் கூறினார்.
கொல்கத்தா-புணே அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது.
இந்நிலையில், கொல்கத்தாவின் வெற்றி குறித்து கேப்டன் கம்பீர் கூறியதாவது:
என்னைப் பொருத்த வரையில், எதிரணி நிர்ணயிக்கும் எந்தவொரு இலக்கையும் அடைந்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. புணேவை 180 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது கடினமான ஒன்று. அதற்கான பாராட்டுகள் அணியின் பந்துவீச்சாளர்களைத்தான் சேர வேண்டும் என்று கம்பீர் கூறினார்.
'என் மீது நம்பிக்கை உள்ளது': இதனிடையே, அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா கூறுகையில், 'எப்போதும் உறுதியாக இருக்கும் நான், எனது செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். கீப்பிங்கைப் பொருத்த வரையில் மகிழ்ச்சியுடன் அந்தப் பணியைச் செய்கிறேன்.
சிறந்த கீப்பருக்கென தோனி ஒரு இலக்கு நிர்ணயித்துவிட்டார். அதைநோக்கி மெதுவாக, சரியாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com